districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க மதுரை மாநாட்டுப் பொதுக்கூட்டம்

மதுரை, ஜூலை 11- மதுரை மாநகர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மதுரை மாந கர் மாவட்ட 4 ஆவது மாநாட்டு  பொதுக்கூட்டம் ஆரப் பாளையம் கிராஸ் ரோட்டில் ஞாயிறன்று மாவட்டச் செய லாளர் அ.பாலமுருகன் தலைமையில் நடைபெற் றது. மாவட்டத் தலைவர் பி. வீரமணி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட உதவித்  தலைவர் டி. குமரவேல் விளக்கி  பேசினார். மாநகர துணை மேயர் டி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் வை.  ஜென்னியம்மாள், உதவித்  தலைவர் பா. பழனியம்மாள்  ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாநிலச் செயலாளர் டி. வில்சன், மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பு ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் முருகேச பாண்டி யன் நன்றி கூறினார். பொதுக்  கூட்டத்தில் மாவட்ட பொரு ளாளர் வி. மாரியப்பன், நிர்  வாகிகள் ஏ. பாண்டி, பி. மனோ கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் வில்சன் பேசுகையில், 2006  ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகள் முழு வதும் ஒரு ஆய்வு செய்தது. அதில் மாற்றுத்திறனாளி களாக உள்ளவர்கள் மிக வும் மோசமான சூழ்நிலை யில் உள்ளார்கள் அவர்  களின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று கூறியது. ஆனால் இந்தியாவில் அதை நிறைவேற்ற தாமதமானது. பாஜக அரசும் மாற்றுத் திற னாளிகளுக்கான சட்டங்  களை கொண்டு வரவில்லை. கேரளாவில் மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று வகையான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதைப் போல தமிழக முதல்வர் செயல்படுத்த வேண்டும் என்றார்.

மாநில பொதுச் செயலா ளர் நம்புராஜன் பேசுகை யில், உலக மக்கள் தொகை யில் 15 சதவீதம் பேர் மாற்றுத்  திறனாளிகளாக உள்ளார் கள். அதில் இந்தியாவில் 20 கோடி பேருக்கும் மேல் மாற்றுத்திறனாளிகளாக உள்ளார்கள் . தமிழக அள வில் மாவட்டத்திற்கு 5 சத வீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளி களை பாதுகாப்பது அரசின் கடமை. ஜெர்மனியில் தனி யார் துறையில் மாற்றுத்திற னாளிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்  கீட்டை வழங்க வேண்டும். அப்படி அவர்கள் ஒதுக்க வில்லை என்றால் அதற்கான நிதியினை மாற்றுத் திற னாளிகளுக்கான மேம்பாட்டு  நிதியில் கொடுத்து விட வேண்  டும் என்று அங்கு ஒரு சட்டம் உள்ளது. அதை நாம் ஒன்  றிய அரசு செயல்படுத்து கிறதா? அப்படி ஆய்வுகளை மேற்கொண்டால் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு என்பது கிடைக் கும். ஆனால் ஒன்றிய அரசு அதுபோன்ற சட்டங்களை மதிப்பதோ அல்லது ஆய்வு கள் மேற்கொள்வதோ கிடை யாது. மாற்றுத்திறனாளி களை தெய்வப்பிறவி என்று  மோடி கூறுகிறார் தெய்வப் பிறவிகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் உதவித்தொகை 300 ரூபாய் தான். தமிழக  அரசு மாற்றுத் திறனாளி களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலு வலகங்களிலும் மாற்றுத் திற னாளிகள் சென்று வருவ தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.