மதுரை, மார்ச் 26- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்பு உரி மைக்கான சங்கம் செவ்வாயன்று தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுடைய பெற்றோர்களை யும் சந்தித்து வாக்குச் சேகரித்த னர். நிகழ்வில், மாவட்ட இணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், மாவட்டச் செயலா ளர் ஆ.பாலமுருகன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ராஜேந்திரன், பி.விஸ்வாநாதன் ஆகியோர் பங் கேற்றனர்.