districts

img

சிபிஎம் கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாணார்பட்டி ஒன்றியக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மதிமுக ஒன்றிய செயலாளர் பாலகுரு, காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜ்கபூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிருபன் ஆகியோர் பங்கேற்றனர்.

;