திண்டுக்கல், அக்.5- திண்டுக்கல்லில் 8 ஆவது புத்தக திருவிழா அக்டோ பர் 6 ஆம் தேதி தொடங்கு கிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ச. ஸ்ரீமதி கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலை மை தாங்குகிறார். இலக்கி யக்களத்தின் தலைவர் பேரா சிரியர். முனைவர் ஆர்.மனோ கரன் அறிமுக உரையாற்று கிறார். கூடுதல் ஆட்சியர் ச. தினேஷ்குமார் விற்பனை யை துவக்கி வைத்து பேசு கிறார். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் முதல் பிரதி யை பெறுகிறார். மாவட்ட வருவாய் அலுவலர் வே. லதா, புத்தகத்திருவிழா மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் க.அருண்மணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்கு நர் நா.சரவணன், திண்டுக் கல் ஆணையர் சுப்ரமணி யன், முதன்மைக் கல்வி அலு வலர் நாசருதீன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். மாவட்ட செய்தி தொடர்பா ளர் வெ.சீனிவாசன் நன்றி கூறுகிறார். மக்கள் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்
புத்தக திருவிழா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் விசாகன் கூறுகை யில், குழந்தைகள் புத்தக வாசிப்பை நாம் ஊக்கப் படுத்த வேண்டும். அவர்கள் முன்பு செல்போன் பார்க்கக் கூடாது. அவர்கள் முன்பு புத்தகத்தை படித்தால்தான் அவர்கள் புத்தகத்தை படிக்க விரும்புவார்கள். நாவ லாசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்களையும் தேடித்தேடி படித்தேன். பலர் அந்த நாவலை வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள் வார்கள். யாருக்கும் இரவல் தர மாட்டார்கள். இப்போது திரைப்படமாக பார்ப்பது ஒரு ரசனை என்றால், புத்தகம் வாசிப்பது இன்னொரு ரசனை ஆகும். அக்டோபர் 6 ஆம் தேதி திண்டுக்கல்லில் இலக் கிய களம் சார்பாக 8வது புத்த கத் திருவிழா டட்லி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா 16 ஆம் தேதி நிறை வடைகிறது. மக்கள் அனை வரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று ஆட்சியர் விசாகன் கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது கூடு தல் ஆட்சியர் ச.தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, இலக் கிய களத்தின் தலைவர்கள் பேராசிரியர் ஆர். மனோ கரன், ச.கண்ணன், பேரா. க.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். (ந.நி.)