districts

img

காந்திகிராம நிறுவன வைர விழா

பாஜகவின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது  தேனியில் துரை வைகோ பேட்டி தேனி, அக்.8- பாஜகவின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்பட கூடாது என  மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார் . தேனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை  வரலாற்று ஆவணப் படமான “மாமனிதன் வைகோ” படம் திரை யிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் துரை வைகோ  கூறுகையில், திருக்குறள் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சு குறித்த  செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக ஆளுநர்  பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். திருவள்ளு வரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவருக்கு காவி நிறம் பூசுவது, ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைப்பது ஏற்புடை யதல்ல. ஆளுநர், ஆளுநராக செயல்படாமல் அரசியல் செய்து வரு கிறார். இனியும் பாஜகவின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்படக்கூடாது. தமிழ் இனத்திற்கே பெருமை தரக்கூடிய மன்னர்தான் ராஜராஜ சோழன். தென்கிழக்கு ஆசியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வர். அவரையும் திருவள்ளுவரைப் போல் மதத்திற்குள் அடக்குவது மலி வான அரசியல் என்றார். காந்திகிராம நிறுவன வைர விழா  சின்னாளப்பட்டி,அக்.8- திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகம், காந்திகிராம அறக்  கட்டளை, காந்திகிராம சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் 75 வது ஆண்டு வைர விழா கொண்டாடப்பட்டது.

பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில்  பல்கலைக் கழக  பொறுப்பு துணைவேந்தர் குர்மித் சிங் தலைமை தாங்கி பேசினார்.  பின்னர் காந்திகிராம நிறுவனர் டாக்டர் ராமச்சந்திரன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதனை தொடர்ந்து  பல்கலைக்கழக பதிவாளர் வி. பி. ஆர்.சிவக்குமார் மற்றும் பேராசிரி யர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்திகிராம அறக்கட்டளை சார்பில் அன்னபூர்ணா பந்தலில் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் வி. பி. ஆர். சிவக்குமார் வரவேற்று பேசினார். வைர விழா மலரை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பங்கஜம் வெளி யிட்டார். அதனை பல்கலைக் கழக பொறுப்பு துணைவேந்தர் குர்மித்  சிங் பெற்றுக் கொண்டார் இதனை தொடர்ந்து காந்திய மற்றும் அமைதி ஆக்கத்திற்கான விருதை தமிழ்நாடு சர்வோதயா மண்டலின் இயக்கு நர் சுந்தரராஜனுக்கும், சிறந்த மருத்துவ சேவைக்கான விருதை கே.சி.பட்டி ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் மேரி ராஜ்குமார் குழுவிற்கும், கைலாசப்பட்டி ஜீவன்ஜோதி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இதனை பத்மபூசன் விருதுபெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுதில்லி தேசிய காந்தி அருங்காட்சியகம் இயக்குநர் அண்ணாமலை, காந்திகிராம சுகா தாரம் மற்றும் குடும்பநல அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் சீத்தா லட்சுமி, காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.