districts

வீட்டு வரி வசூலிப்பதை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும்

மதுரை, நவ.24-  மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி வசூல் செய்வதை தனியா நிறுவனத்திடம் வழங்குவதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன் விடுத் துள்ள அறிக்கையில், ‘‘வீட்டு வரி வசூல் செய்வது மற்றும் அதற்கான பணியை தனி யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணை யாளர் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் பல பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தூய்மை பணி மூலம் குப்பை அகற்றுதல், பல்வேறு மண்டலங்களில் கணினி இயக்குதல், தெரு விளக்கு பராமரித்தல், குடிநீர் பராமரிப்பு, காவலர் பணி கள், மாநகராட்சி பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் நிரந்தரம் இல்லாத ஆசிரி யர், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர், வரி வசூல், பதி வரை எழுத்தர் உள்ளிட்ட பணிகள் தனியார் வசம் ஒப்பந்த முறையில்  தரப் பட்டு வருகிறது.  ஏற்கனவே இப்பணியில் நிரந்தரமாக ஊழியர்களாக உள்ளவர்கள் ஓய்வு பெற்றால் அதற்கு பதிலாக ஆட்கள் அரசு மூலமாக வேலைக்கு எடுக்காமல் வெளி முகமை மூலம் செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது.  இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிப்பதோடு, வரி வசூல் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல் மதுரை மாவட்டத்தில் பல்லாயிரக்க ணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து காத்தி ருப்பவர்களுக்கும், வாரிசு அடிப்படையில் உள்ள வாரிசுதாரர்களுக்கும் பணி கள் வழங்கிட மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசுப் பணியில் தனி யார் மையத்தை உருவாக் கும் அரசாணை 152-ஐ ரத்து செய்திட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.