சின்னாளபட்டி, மே 19- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள தேவாங்கர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கணிதம் மற்றும் சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி பிரியதர்ஷ்ணி 491 மதிப்பெண்களுடன் திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் இரண்டாமிடமும்,தாலுகா அளவில் முதலிடமும் பிடித்தார், மாணவி பிரீத்திக்கா அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணுடன் 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி சரஸ்வதி 477 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனர். இதேபோல தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஹேமாஸ்ரீ என்ற மாணவி 485 மதிப்பெண்கள் பெற்றதுடன் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதலிடம் பிடித்தார். மாணவி சந்தியா 470 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், ராகவி, மற்றும் யோகாஸ்ரீ ஆகிய இரண்டு மாணவிகள் 467 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்தனர், அவர்களை பள்ளியின் நிர்வாக தலைவர் பெத்தனசாமி,செயலாளர் இராகவன், தலைமையாசிரியர் ஞானசேகரன், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை விநாயக ஜெயந்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்தி பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்வின்போது மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உடனி ருந்தனர்.