districts

கொரோனா தடுப்பூசி போட்டதால் கருச்சிதைவா?

தூத்துக்குடி, ஜன.20- தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் பெண் ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக எழுந்த புகாரை மறுத்து சுகாதா ரப் பணிகள் இயக்குநர் காரணம் என்ன என்று விளக்கம் அளித்துள் ளார். இது குறித்து கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அருகே உள்ள மணியாச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி 3 மாத (13 வாரம்) கர்ப்பிணி பெண் ஒருவர் 2 ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த  13 ஆம் தேதி அவருக்கு கர்ப்பம் கலைந்து உள்ளது. சமூக வலை தளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் கர்ப்பம் கலைந்த தாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து எனது (கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர்) தலைமை யிலான மருத்துவ குழுவினர் விசா ரணை நடத்தினோம். விசாரணை யில் கர்ப்பிணி பெண் கடந்த 5 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். 8 ஆம் தேதி அந்த பெண், டாக்டர் அறிவுறுத்த லின் பேரில் கர்ப்பத்தை ஸ்கேன் செய்து பார்த்து உள்ளார். அப் போது, கருவளர்ச்சியில் குறை பாடு இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த கரு 7 வாரம் 4 நாட்கள் வளர்ச்சி மட்டுமே இருந் தது. அதே போன்று குழந்தை யின் இதய துடிப்பும், அசைவும் ஸ்கேனில் தெரியவில்லை.  இதனால் ஸ்கேன் விவரத்தை பார்த்த டாக்டர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி உள்ளார். அங்கு 13 ஆம் தேதி மருத் துவ காரணங்களுக்காக கருக் கலைப்பு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தி 3 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. ஆனால் கரு வளர்ச்சி 5 வாரங்கள் குறைவாக உள்ளது. ஆகையால் மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கருச்சிதை வுக்கும், கொரோனா தடுப்பூசிக் கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாக தெரியவந்து உள்ளது. கொரோனா தடுப்பூசி யால் கருச்சிதைவு ஏற்பட வில்லை. ஆனாலும் தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.