districts

img

பாஜக அரசு இல்லாத மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு

வெறுப்பு, பகைமை மூலம் தனது அரசியல் பலத்தை நிலை நிறுத்த விரும்புகிறது பாஜக. இதற்கு உதாரணம் மணிப்பூர். பாஜக அரசுகள் அல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மாநில உரிமைகளைப் பாஜக பறிக்கிறது. தமிழ்நாட்டில் திரைமறைவிலிருந்து வாலாட்டுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆயிரம் அறிவாளிகளுடன் கருத்து மோதல் நடத்தலாம். ஆனால், ரவி போன்ற நபர்களிடம் கருத்து மோதல் நடத்துவது வீண். மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தொடங்கி மாநில சட்டமன்றம் வரை ஆளுநரின் தலையீடு உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்பதாலேயே எய்ம்ஸ் மருத்துவமனை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரையின் வடபுறத்தில் ரூ.200 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ளது திமுக அரசின் சாதனையைச் சொல்கிறது. மதுரையின் தெற்குப்புறத்தில் ஒன்றிய அரசு ரூ.250 கோடி ஒதுக்க மறுத்ததால் எய்ம்ஸ் ஒற்றைச் செங்கல்லோடு நிற்கிறது. இது மோடியின் வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. அதிகாரத்தை நிலை நிறுத்த சாதி, மதம், ஆளுநர் என அனைத்தையும் பயன்படுத்தி அரசியல் சாசனத்தைச் சிதைக்க முயற்சிக்கும் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடு இது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதிலிருந்து