சிவகங்கை மாவட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கீழடி அகழவாராய்ச்சி நிலையத்தினை வெள்ளியன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.