districts

img

பெரியாறு அணை மராமத்து பணிக்கு அனுமதி மறுப்பு : துணைக்குழு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழகம்

தேனி, பிப்.25-  முல்லைப் பெரியாறு அணை யில் நடைபெறவுள்ள மராமத்து பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் கேரள வனத்துறை மற்றும் கேரள பொ துப்பணித் துறையினரை கண்டி த்து  துணைக்குழு ஆலோசனைக் கூட்டத்திலிருந்து தமிழக அதி காரிகள் வெளிநடப்பு செய்தனர். முல்லைப் பெரியாறு அணை யை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியா ளர் குல்சன் ராஜ் தலைமையி லான மூவர் கண்காணிப்பு குழு வை அமைத்தது. இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சி யில் உள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரி யாறு சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப் பனை நீர்ப்பாசன செயற்பொறி யாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். தற்போது நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்துள்ள நிலை யில் துணைக்கண்காணிப்பு குழு வினர் பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தனர். மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, கசிவுநீர் குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, துணைக் குழுவின் ஆலோச னைக் கூட்டம் வியாழனன்று மாலை குமுளியிலுள்ள கண்கா ணிப்பு குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், தமி ழக அதிகாரிகள், குழு தலைவர் சரவணக்குமாரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனர். பின்பு, உச்சநீதிமன்றம் அணையை பராமரிக்கவும், பேபி அணை யைப் பலப்படுத்தவும் உத்தர விட்டுள்ளது. பல ஆண்டுகள் ஆன நிலையில் மராமத்துப் பணி களுக்கான கட்டுமானப் பொ ருட்களை கேரள வனத்துறை மற்றும் கேரள பொதுப்பணித் துறையினர் அனுமதிக்க மறுத்து வருகின்றனர் என்று கூறி வெளி நடப்பு செய்தனர். இதனைத் தொ டர்ந்து  ஐந்து நிமிடத்திலேயே குழுதலைவர், கேரள பிரதிநிதிகள்  கூட்டம் முடித்து வெளியேறினர்.