சிவகங்கை, ஜூன் 4- மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்த பாஜக எம்.பி. யும் மல்யுத்த அமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய் யக்கோரியும் போராடிய மல் யுத்த வீராங்கனைகள் மீது அடக்கு முறையை ஏவிய ஒன்றிய அரசைக் கண்டித் தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவ கங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன், விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் துலைவர் வீரபாண்டி, மாவட் டச் செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணி யம்மா உள்ளிட்டோர் பேசி னர்.ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.