இராமநாதபுரம், டிச.31- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றிய காளியம்மாள், அவருடைய மகள் மணிமேகலை ஆகியோரது படுகொலைக்கு நீதி கேட்டு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.அய்யத்துரை தலைமை தாங்கினார். மாநில செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் கண்டன உரையாற்றினார். கே.தனுஷ்கோடி நன்றி கூறினார். இதில், மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, மாவட்ட தலைவர்கள் எஸ்.ஏ.சந்தா னம், ஏ.சுடலைகாசி, எம்.கருணாமூர்த்தி, வி. பாஸ்கரன், கே.பச்சமால், எம்.ஆர்.முரளி, எம்.மலைராஜன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முனியசாமி, தனியார் மோட்டார் வாகன தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.மணிகண்ணு, கட்டுமான சங்கத் தலைவர் ஆர்.வாசுதேவன், காளி யம்மாளின் மூத்த மகள் சண்முகப்பிரியா, சகோதரர்கள் காளிமுத்து, சேகர், சகோதரி இந்திரா உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.