districts

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோதைமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார், துப்புரவுப்பணியாளர் வி.சித்ராவை சாதியைச் சொல்லி திட்டியதைக் கண்டித்தும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் புதனன்று பழனியில் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே. அருள்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. டி. கலைச்செல்வன், மாவட்ட தலைவர் எம்.ஆர்.முத்துசாமி, மாவட்ட பொருளாளளர் ஆர். வனஜா, துணை தலைவர் சோ.மோகனா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம். ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பி. செல்வராஜ், சிஐடியு நிர்வாகிகள் ஆர். ஈஸ்வரன், சி. பெரியசாமி, ஆதித்தமிழர் கட்சியின் தென்மண்டல இளைஞரணி நிர்வாகி க.பாண்டி .விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி. துரைசாமி, வாலிபர் சங்க செயலாளர் சிவா ஆகியோர் பேசினர்.