மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாண்மை இயக்குநரின் காரின் பின்பகுதியில் பேருந்து லேசாக உரசியதற்காகப் பேருந்து ஓட்டுநரை இடைநீக்கம் செய்து, பணிமனை மாற்றம் செய்த மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரின் நடவடிக்கையைக் கண்டித்துப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்து மதுரை (சிஐடியு) தொழிலாளர் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி. மகாதேவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் உதவித் தலைவர் வி.பிச்சை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.