தக்கலை, மார்ச்.12- எல்ஐசி பங்குகளை ஒன்றிய அரசு தனியா ருக்கு விற்பதை கண்டித்து எல்ஐசி தக்கலை கிளை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வியாழனன்று (மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் சிவானந்தம் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் மணி துவக்க உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்பின் விளக்க உரையாற்றினார். எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகிகள் மணி கண்டன், விஜயகுமார், ஸ்ரீவித்யா, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஷீலா, சரோஜினி, முரளிதரன், அரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து முழக்கங் கள் எழுப்பப்பட்டன.