districts

img

விழுப்புரம் தனியார் ஆசிரமத்தில் குழந்தைகள், முதியோர்களை அரசு பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.17-  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் செயல் பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பெண் கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள வர்களை தமிழக அரசு பாதுகாத்து,  நிவாரணம் வழங்க வேண்டும்.  அனுமதி இல்லாமல் ஆசிரமம் நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்ற  ஆசிரமங்களை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண் டும் என்று என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர்  மாவட்டக்குழு சார்பில் புதூர் காந்திபுரம் பாண்டிய நகர் பகுதியில்  வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொரு ளாளர் ஆர். லதா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆர். சசிகலா, மாவட்ட செயலாளர் வை. ஜென்னியம்மாள் ஆகி யோர் பேசினர்.   கிளைச் செயலாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர். 

;