தேனி, மார்ச் 7- அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி அம்மன் கோவில், கம்பம் கம்பரா யர் கோவில் நிலங்களில் பல ஆண்டு களாக குடியிருப்பவர்களிடம் பல மடங்கு வரி விதித்து, அவர்களை வெளியேற்ற நட வடிக்கை எடுப்பதைக் கைவிடக் கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கண்ணன் தலைமை வகித்தார் . விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் சங்க நிர்வாகி கள் எல்.ஆர்.சங்கரசுப்பு, கே.தயாளன், ஆண்டிபட்டி பேரூராட்சி உறுப்பினர் வி. சின்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியாச் செயலாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரனை சந் தித்து மனு அளித்தனர்.