இராஜபாளையம், ஆக.20- மணிப்பூர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடை பெற்று வரும் கலவரங்களை தடுக்கத் தவறிய ஒன்றிய-மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து இராஜபாளையம் அனைத்து ஜமாத்தார்கள், இத்திஹாதுல் உலாமா சபை, மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகள், அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். காங்கி ரஸ் கட்சி மாவட்ட தலை வர் ரங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் ரவீந்தி ரன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் எழுச்சி வேந் தன், எஸ் டி பி ஐ கட்சியின் அபூபக்கர் சித்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சையது இப்ரா ஹிம்,மனிதநேய ஜனநாயக கட்சியின் அப்துல் சலாம், தமிழ்ப்புலிகள் கட்சியின் கனகராஜ், ரோமன் கத்தோ லிக்க சபையின் பங்குத் தந்தை சாமுவேல், தென் னிந்திய திருச்சபை சார்பில் பாதிரியார் ஜான் கமலேஷ் ஆகியோர் பேசினர்.