திரிபுராவில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தும் தொடர் அராஜகங்களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.அருள்செல்வன், எஸ்.கமலக்கண்ணன், எம்.ராமசாமி, பழனி நகர் செயலாளர் கே.கந்தசாமி, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் என். கனகு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.