மதுரை, ஜூன் 20- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மத் தியக்குழு உறுப்பினராக உள்ள மேற்குவங்க மாநி லத்தைச் சேர்ந்த சோமா தாஸ் மீது திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் குண்டர்கள் கொலை வெறி நடத்தினர். இதனைக் கண்டித்து ஜன நாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாந கர் மாவட்டச் செயலாளர் வை.ஜென்னியம்மாள் தலைமை வகித்தார். மத்தி யக்குழு உறுப்பினர்கள் எஸ். கே.பொன்னுத்தாய், ஆர். சசி கலா, புறநகர் மாவட்ட செய லாளர் க. பிரேமலதா, மாநகர் மாவட்ட தலைவர் ஆர். லதா ஆகியோர் கண்டன உரை யாற்றினார். மாநகர் பொரு ளாளர் சாந்தி, புறநகர் பொரு ளாளர் விஜயா, மாநகர் மாவட்ட நிர்வாகி மல்லிகா, காசு பாண்டி கல்பனா, விமலா, புற நகர் மாவட்ட நிர்வாகி அமிர்த வல்லி, சரஸ்வதி, ஜான்சி மற் றும் பலர் கலந்துகொண்டனர்.