தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்து இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகராஜ், நகரச் செயலாளர் சரவணன், பொருளாளர் வீரமணி, மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.