districts

img

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்மைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கயவர்களை கைது செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி ,மாவட்ட செயலாளர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் மதி ஆகியோர் பேசினர்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 74-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. மூத்த புலத்தலைவர் பேராசிரியர் எல்.ராஜா, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். பதிவாளர் முனைவர் வி.பி.ஆர்.சிவக்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.