மதுரை, ஏப்.26- சட்டவிதிகளை மீறி அனைத்து வாகனங்களிடமும் கட்டணக் கொள்ளை நடத்தும் கப்பலூர் சுங்கச் சாவடியை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட அனை த்து வாகன உரிமையாளர்கள், ஓட்டு நர்கள் மற்றும் சாலைப்போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவல கம் முன்பு செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா முழுவதும் 526 சுங்கச் சாவடிகள் உள்ளன. தினம் தோறும் இரவு-பகலாக ரூ.100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை வசூல் நடை பெறுகிறது. இது அப்பட்டமான பகற் கொள்ளை. தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக சுங்கச்சாவடி கள் இருந்தால் அடுத்த மூன்று மாதங்க ளில் மூடப்படும் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டிலுள்ள 32 சுங்கச்சாவடி களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்திருந் தார்.
தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடி கள் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன என்றும் எனவே 32 சுங்கச்சாவடிகளை நீக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட் காரியை நேரில் சந்தித்து வலியுறுத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தி ருந்தார். மதுரை மாவட்டத்தில் சிட்டம் பட்டி-கப்பலூர் இடையிலான தூரம் 45 கிலோ மீட்டர் தான். நிதின் கட்காரி அறிவித்தபடி இந்த சுங்கச் சாவடி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் சுங்கச் சாவடி ஒன்று கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையை மட்டும் பயன்படுத்தி கடந்து செல்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அடிக்கடி வாகனங்களை மறித்து சுங்கவரி கேட்பது தொடர்கிறது. கப்பலூர் சுங்கச்சாவடியால் விருதுநகர், தே.கல்லுப்பட்டி, திரு வில்லிபுத்தூர், இராஜபாளையம், தென்காசி பகுதியைச் சேர்ந்த வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டி களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மோட்டார் தொழில் கடும் நெருக்க டியில் உள்ளது.
குறிப்பாக இராஜபாளையம், தே.கல்லுப்பட்டி வழியாகச் செல்லும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றன. இவர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது அநீதி யானது. திருமங்கலம் நகராட்சியிலி ருந்து மூன்று கிலோ மீட்டர் தொலை வில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. அதனால் திருமங்கலம் மக்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருமங்கலத்தில் வசிப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசும் ஒன்றிய அரசும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். ஒன்றிய அரசு பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டுமென்றார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன். மாநகர் மாவட்டச் செயலா ளர் இரா.தெய்வராஜ், இரா.லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், புற நகர்-மாநகர் மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்திரன், மா.கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மதுரை துணை மேயர் டி.நாக ராஜன், இ.உதயநாதன், எஸ்.செந்தா மரைக்கண்ணன், செ.கண்ணன் மற்றும் மதுரை, விருதுநகர், தென் காசி மாவட்ட அனைத்து வாகன உரி மையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சாலைப்போக்குவரத்துத் தொழி லாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.