districts

img

ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 13- முந்தைய தமிழக அரசால் பறிக்கப்பட்ட ஒன்றிய அரசு ஆசிரி யர்களுக்கு இணையான ஊதி யத்தை மீண்டும் இடைநிலை ஆசிரி யர்களுக்கு வழங்கிடக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோ வில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கை யில் கூறியவாறு தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், தேசத்தின் எதிர்கா லக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2020 ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் எஸ் டி எப் ஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலா ளர் ச.மயில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சி.வள்ளிவேலு, தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆர்.சுரேஷ், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பென்னட் ஜோஸ், தமிழ் நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.வேலவன், தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனி யார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் டோமினிக் ராஜ் உள்ளிட்டோர் பேசி னர். இதில் எராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.