districts

img

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தேனி ,ஆக.18- காலை சிற்றுண்டி திட்டத் தை சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்க வேண்டும் .  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் .குறைந்த பட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில்  பெருந்திரள் முறை யீடு -ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . கம்பம் ,பாளையம் ,தேனி நகர் ,ஒன்றியம் ,பெரி யகுளம் நகர் ,போடி நகர் கிளைகளில் போராட்டம் நடைபெற்றது .மாவட்ட தலைவர் பி .ரவி ,மாவட்டச் செயலாளர் சி.பவானி  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . திண்டுக்கல்      திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜெசி, வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க தலைவர்கள் எஸ்.முபாரக்அலி, விவே கானந்தன், ராஜமாணிக்கம், பூசாரி ஆகியோர் ஆத ரித்துப் பேசினர்.   சிவகங்கை சிவகங்கை மாவட்டத் தில் மானாமதுரை,திருப்பு வனம்,திருப்பத்தூர், சிங்கம் புணரி உட்பட 11 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாவட்ட தலைவர் பாண்டி,  மாவட்ட செயலா ளர் லதா மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பேசி னர். ராட்சி ஒன்றிய ஆணை யாளரிடம் மனு கொடுத்த னர்.