திருநெல்வேலி, ஜூன் 26- அரசு போக்குவரத்து கழகம் திரு நெல்வேலி மண்டலம் கட்டபொம்மன் நகர் பணிமனை நடத்துனர் சுப்பிரமணி யன் தடம் எண் 9N பேருந்தில் (24-6- 2022) அன்று மாலை பணியில் இருந்த போது கல்லுரி மாணவர்களால் கடுமை யாக தாக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுபோல் ஏற்கனவே சேரன்மகா தேவி பணிமனையை சேர்ந்த நடத்து னர். ராமகிருஷ்ணன் என்பவரும் பணி யில் இருந்தபோது கல்லிடைக்குறிச்சி யில் சமூக விரோதிகளால் தாக்கப் பட்டுள்ளார். தொடர்ந்து நடத்துனர்கள் தாக்கபட்டு வருவதைக் கண்டித்து தாமிரபரணி பணிமனை முன்பு ஞாயிற் றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தாமிரபரணி டெப்போ முன்பு சிஐடியு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பணி மனைக் தலைவர் பி.காசிராஜன் தலை மை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட துணை பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.