திண்டுக்கல், ஜூலை 28- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஊராட்சி ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத்தலைவர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. அருள்செல்வன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.குணசேகரன், ஒன்றி யச்செயலாளரும் வடமதுரை பேரூராட்சி துணைத்தலைவருமான எம்.மலைச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மருதை, சம்சுதீன், கண்ணன், ஜெயராஜ், சின்னத்தங்கம், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (நநி)