தூத்துக்குடி,நவ. 3 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென் சன் திட்டத்தை வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 12,000 வழங்கிட வேண்டும், மத்திய அரசு வழங்கிடும் அதே நாளில் அகவிலைப் படி அனைத்து மாநில அரசு ஊழியர்க ளுக்கும் வழங்கிட வேண்டும், அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தை யும் முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் மயில்வாகனம் தலைமை வகித் தார். கிளை செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் அல்போன்ஸ் லிகோரி துவக்க உரையாற்றினார். எட் டப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். அனைத்து துறை ஓய்வுதியர் சங்க மாவட்டச் செயலாளர் இல. ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். சாத்தான்குளம் வட்டாட்சியர் அலு வலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு வட்டத் தலைவர் தேவ சமாதானம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபால் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். சுதர்சன், பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத் தலைவர் திரவி யம் நிறைவுரையாற்றினார்.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் கோமதிநாய கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பேராட்சி, பூ.கோபாலன், பார்த்த சாரதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கோமதிநாயகம் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன் தலை மை தாங்கினார்.மாவட்ட துணைத்தலை வர் பால்சாமி துவக்கவுரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் சலீம் முகம்மது மீரான் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி ஈஸ்வரன், மாணிக்கம், மாவட்டத் தலைவர் கருப்பை யா, முன்னாள் மாநிலத் தலைவர் கண் ணன், வட்டக்கிளைத்தலைவர் சுந்தர மூர்த்தி நாயனார், மாநில துணைத் தலை வர் பேராசிரியர் சங்கரி ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.