districts

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப்.19- ஆல்பர்ட் டேவிட், ஜைடஸ், இமாலயா, டி.டி.கே. உள்ளிட்ட பல மருந்து கம்பெனிகளின்  தொழி லாளர் விரோதப் போக்கைக் கண்டித்து திண்டுக்கல்லில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், நிர்வாகிகள் மதுக்குமார், ராம்குமார், அமா னுல்லா ஆகியோர் பேசினர்.  மருந்து பிரதிநிதிகளுக்கு சட்டப்படியான நியமன ஆணை  கொடுக்க வேண்டும், பி.எப். இ.எஸ்.ஐ. போன்ற சலுகைகள் தர வேண்டும் என்று  வலியுறுத்தப் பட்டன.