districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் பெ. சேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நஜ்முதீன், மாநில செயற்குழு உறுப்பினர் திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.