districts

மதுரை முக்கிய செய்திகள்

விருதுநகர் ஆட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை, ஜூன் 17- விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய  உதவிப் பொறியாளர் பரோஷ்கானை பணியிலிருந்து விடுவித்ததை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் செந்தில் நாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராதா கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் பாண்டி, தனபால், நடராசன் ஆகி யோர் பேசினர்.

பதவிகளுக்கு விண்ணப்பிக்க காந்திகிராம பல்கலை அறிவிப்பு

சின்னாளபட்டி, ஜூன் 17- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக்கழகத்திற்கு பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதி காரி, நிதி அலுவலர் போன்ற பதவிகளுக்கு விண்ணப் பங்கள் வரவேற்பதற்கு 20.05.2023 முதல் தொடங்கப்பட்டு 19.06.2023 வரை நிர்ணயிக்கப்பட்டது. தற்பொழுது, விண்  ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 17.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே ஊராட்சி மன்ற பெண் பணியாளரிடம் நகை பறிப்பு

ஒட்டன்சத்திரம், ஜூன் 17-  ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் பட்டப்  பகலில் நடந்து சென்ற ஊராட்சி மன்ற பெண் பணி மேற்பார்வையாளரிடம் நகையை பறித்துச் சென்றனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள  இடையக்கோட்டையில் நந்தவனம் அருகே வசித்து வரு பவர் நாட்ராயன் மனைவி விஜயா(வயது 41). இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற் பார்வையாளராக பணியாற்றி வருகிறார். ஜூன் 17 அன்று காலை வழக்கம்போல இடையக் கோட்டை நேருஜி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்று  துப்புரவுப்பணியை மேற்பார்வை செய்துவிட்டு இடை யக்கோட்டை வடக்கு தெருவில் நடந்து வந்துகொண்டி ருந்தார். அப்போது பின்பக்கமாக, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த ரூ 1.50 லட்சம் மதிப்புள்ள 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.  இது குறித்து விஜயா இடையக்கோட்டை காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமிராக்களில் பதிவாக காட்சிகளை கொண்டு விசா ரணை நடத்தி வருகிறார்.

ஜூன் 21 - மாற்றுத்திறனாளிகளுக்கு தேனியில் சிறப்பு குறைநீர் கூட்டம் 

தேனி, ஜூன் 17- தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.வி . ஷஜீவனா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் மாதம் 21 ஆம் தேதி  காலை 10 மணி முதல் 1 மணி வரை தேனி மாவட்ட  ஆட்சியரக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத் தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கங்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

முன்னாள் படைவீரர், குடும்பத்தினருக்கு ஜூன் 19 இல் குறைதீர் கூட்டம் 

தேனி, ஜூன் 17- வீர விருது பெற்றோர், போரில் உயிர்த் தியாகம் செய்  தோரை சார்ந்தோர்,முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடை பெறும் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தை சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்த்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரி பவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா. தலைமை யில் ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது.  தேனி மாவட்டத்தைச் சார்ந்த வீர விருது பெற்றோர்,  போரில் உயிர்த்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்  னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்  குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை  நகலுடன் தங்கள் குறைகள் குறித்தமனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பழனியில் மருத்துவ முகாம்

பழனி, ஜூன் 17-  பழனி நகராட்சி, பழனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் பழனி துணை சுகாதார நிலையம் சார்பில்  மருத்துவ முகாம் அண்ணாமலை மகப்பேறு மருத்துவ மனையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இம்முகாமில் யோகா நிகழ்ச்சி மற்றும் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக் கப்பட்டன. பழனி புதிய நகராட்சி அலுவலகத்தில் இரத்த  தானம் முகாமும் நடைபெற்றது. இம்முகாமில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டணர்  நகர் மன்ற தலைவர், உமாமகேஷ்வரி,துணைத் தலை வர், கந்தசாமி, ஆணையாளர்(,பொ) வெற்றிச்செல்வி நக ராட்சி பொறியாளர், மற்றும் நகர்நல அலுவலர், மாவட்ட  சுகாதார பணி துணை இயக்குனர் அனிதா, அரசு மருத்து வர்கள் உதயகுமார் முருகேஷ்குமார் ,பழநி நகர் மன்ற உறுப்பினர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கல்வி உதவித்தொகை ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்கள்  இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

மதுரை, ஜூன் 17- மதுரை மாவட்டம் ஆதி திராவிடர்/ பழங்குடியினர்/கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன  மாணவர்கள் கல்வி உத வித்தொகைக்கு விண்ணப் பிக்க மீண்டும் இணையதளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சௌ.சங்கீதா தெரிவித் துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி பள்ளி மற்றும் கல்லுாரிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி பயின்ற ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு Post Matric கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக https:/tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணைய தளம் 16.06.2023 முதல்  மீண்டும் செயல்படுத்தப்பட் டுள்ளது. ஏற்கனவே விண்ணப் பிக்க தவறிய மாணாக்கர் இவ்வாய்ப்பினை பயன் படுத்தி 30.06.2023-க்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், காலநீட்டிப்பு வழங்க இயலாத சூழ்நிலையுள்ளதால் குறித்த  காலக்கெடுவிற்குள் விண்  ணப்பித்து கல்வி உத வித்தொகையினை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 17- திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிப்பு அர்ச்சுனா புரம் தொடக்கப்பள்ளியில் பாலியல் தொல்லை அளித்த  தலைமை ஆசிரியர் கருப்பசாமியை(55) வத்திராயிருப்பு போலீஸார் கைது செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் தொடக்க பள்ளியில் வத்திராயிருப்பு நொண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்ப சாமி(55) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரு கிறார். இந்நிலையில் வியாழனன்று 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றுள்  ளார். அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியர் கருப்ப சாமி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வத்திராயிருப்பு போலீ சார் தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், ஜூன் 17- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது நத்தம்பட்டி அங்கு சார்பு ஆய்வாளராக இருப்ப வர் நமச்சிவாயம். இவர் நத்தம்பட்டி போலீஸாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது இலந்தை குளம் கண்மாயில் இருந்து மணல் அள்ளி வந்த டிராக்டர் ஒன்று பதிந்துள்ளது.அதனை மற்றொரு டிராக்டருடன் இழுத்துக்கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சென்ற போலீஸாரை பார்த்ததும் டிராக்டரை போட்டு விட்டு  தப்பி ஓடினர். பின்னர் போலீசார் அதனை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் டிராக்டரின் உரிமையாளர் ஆகிய இருவர் மீதும் வழக்கு  பதிந்து தேடி வருகின்றனர்.

கொத்தடிமை -குழந்தை தொழிலாளர்கள்  குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்கள்

விருதுநகர், ஜூன் 17- கொத்தடிமைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியதாவது: குழந்தைத்தொழிலாளர்களை எவ்வித பணிகளிலும், அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத் தொழி லாளர்களை பணியமர்த்துவதும், குழந்தை மற்றும் வளரி ளம் பருவத்தொழிலாளர்களை தடுத்தல் மற்றும்  முறைப்படுத்துதல் சட்டம் 1986-இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளது கண்ட றியப்பட்டால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை  சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப் படும். குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு செல்ல  வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தமது குழந்தை களை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நட வடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டம் 1976-இன்  படி ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை தண்டனை விதிக்  கப்படும். குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க மற்றும் புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் 1800 42 52 650 மற்றும் எளிதில் நினைவில் கொள்ள 15 52 14 என்ற  உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே  பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ள லாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மருத்துவ முகாம்

முதுகுளத்தூர். ஜுன் 17- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா மகின்டி கிராமத்தில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் ரெப்பே லியன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மகிண்டி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யகுமார் முன்னிலை வகித்தார். மொத்தம் 759 பேர்  மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பலன் அடைந்த னர்.