districts

img

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினரைக் கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கண்டன உரையாற்றினார். தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பவுலி வளவன் பேசினார். சிபிஎம் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி ,பகுதிக்குழு உறுப்பினர் என். கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.