districts

img

வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.11-  பயிர்களை அழித்துவரும் பன்றிகள் உள்ளிட்ட  வன விலங்குகளை தடுத்திட நடவடிக்கை எடுக்க  கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழு சார்பில் பேரையூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.வேல்பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் துவக்கி வைத்தார். சேடப்பட்டி ஒன்றியச் செயலாளர் பி.காசி மாயன், சிபிஎம் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா ளர் வி.சமயன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் டி.ஏ.இளங்கோவன், டி.கல்லுப்பட்டி ஒன்றியத் தலைவர் காரல்மார்கஸ், ஒன்றியச் செயலாளர் முத்து கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.