districts

img

மதுரையில் அரசு போக்குவரத்து கிளை மேலாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ.26-  போக்குவரத்து ஓட்டு நரை தரக்குறைவாக பேசி  அவமதித்த மதுரை அரசு  போக்குவரத்து கிளை மேலா ளரைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மதுரை மண்ட லம் பொன்மேனி கிளையில்  ஓட்டுநர் பாண்டி என்பவர் தனது தாயார் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விடுப்பு வேண்  டும் என்று கேட்டுள்ளார். அவ ருக்கு விடுப்பு வழங்காமல் கிளை மேலாளர் தரம் தாழ்ந்து  பேசியுள்ளார். இதற்கு நியா யம் கேட்ட சிஐடியு சங்க செய லாளர் வீரக்குமாருக்கும் முறையான பதில் அளிக்க வில்லை. மாறாக வீரக்குமாரை கிளை மேலாளர் சஸ் பெண்ட் செய்துள்ளார்.  கிளை மேலாளரின் இத்த கைய அராஜகப் போக்கைக் கண்டித்து மதுரையில் உள்ள அனைத்து பணிமனை முன்பு சனிக்கிழமையன்று அரசு  போக்குவரத்து மதுரை  தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பை - பாஸ் சாலையில் உள்ள தலைமையகம் முன்பு நகர்கிளை தலைவர் பி. ஜெயபிரகாசம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்  றது. சங்கத்தின் பொதுச் செய லாளர் ஏ. கனகசுந்தர், துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.மணிமாறன், புற நகர் கிளைச் செயலாளர் எல்.  பாலகுமார் ஆகியோர் பேசி னர்.

;