districts

img

சிவப்புச் சட்டைக்கு அனுமதி மறுப்பு: அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப்.5- மோடி அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக தில்லியில் புதனன்று எழுச்சிமிகுப் பேரணி நடைபெற்றது. பேரணி முடிந்தவுடன் திண்  டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிஐடியு, விவ சாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் காந்தி சமாதியை காண்ப தற்காகச் சென்றனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜி-20 மாநாடு நடை பெறும் சூழலில் சிவப்புச் சட்டை, துண்டு,  பனியன், போட்டவர்களுக்கு அனுமதி யில்லை எனக் கூறி அனுமதி மறுத்துள்ள னர். இதையடுத்து விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செய லாளர் கே.அருள்செல்வன் தலைமையில் காந்தி சமாதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்  பாட்டம் நடத்தினர்.  தகவலறிந்து வந்த உயரதிகாரிகள் ஜி-20 மாநாடு நடைபெறும் சூழலில் சிவப்புச் சட்டைக்காரர்களை அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறிய தற்காக மன்னிப்பு கேட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அனைவரையும் காந்தி சமாதி யை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.