இராஜபாளையம், மே 16- இராஜபாளையம் வட்டம் சேத்தூர் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 6 ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட் கள் வாங்கச் செல்லும் மக் களை கைரேகை விழவில்லை என திருப்பி அனுப்பும் நிர் வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம் மற் றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தூர் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி விளக்கிப் பேசி னார். மாவட்டக் குழு உறுப் பினர் ராமர், ஒன்றியச் செய லாளர் சந்தனகுமார், ஒன் றிய குழு உறுப்பினர்கள், முக வூர் ஊராட்சிமன்ற தலைவர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.