திண்டுக்கல், டிச.17- திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சின்ன வெங் காயம் பயிரில் தவளை நோய் எனப்படுகிற வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ள னர். கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ஒரு லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றி யம் அய்யலூர் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிட்ட தோட்டங்களில் மழை காரணமாக வெங்காய பயிரின் வேர்கள் பாதிக்கப்பட்டு செடிகள் வாடி படுத்துவிட்டன. இதனை வேர் அழுகல் நோய் என்றும் கூறுவார்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் திரு விழா காலம் என்பதால் இந்த காலத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் மழை காரணமாக வேர் அழு கல் நோய் ஏற்பட்டு முதலுக்கும் மோசம் வந்த தாக விவசாயிகள் புலம்புகிறார்கள். கொம் பேறிபட்டி, மலைப்பட்டி, பாகாநத்தம் உள் ளிட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இந்த தவளை நோய் தாக்கியுள்ளதாக விவசாயி கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மலைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் கூறுகையில், சின்ன வெங்காயம் விதை (10 கிலோ ) 700க்கு விற்கப்படுகிறது. நான் 40 கிலோ எடை விதை வெங்காயம் வாங்கி நடவு செய்தேன். 3 முறை மருந்த டித்துள்ளேன். ஒரு முறை மருந்தடிக்க ரூ.3 ஆயிரம் கூலி கொடுத்துள்ளேன். 3 முறை உரம் அடித்துள்ளேன். ஆனால் வேர் அழுகல் நோய் காரணமாக காய் பெரிதாக காய்க்க வில்லை. இதை பறிப்பதற்கு ரூ.5 ஆயி ரம் வரை செலவாகும். அப்படி காய் பறித்தால் அது மருந்து மற்றும் உரம் வைத்த கூலிக்குக் கூட மிஞ்சாது என்று வேதனையுடன் தெரி வித்தார்.
ஏக்கருக்கு ஒரு லட்சம் நிவாரணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடமதுரை ஒன்றியச்செயலாளர் ஆர்.குணசேகரன் கூறு கையில், வடமதுரை ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக வேலாயுதம்பாளை யம், காணப்பாடி, பாகாநத்தம், மாமரத்து பட்டி, வளைவிசெட்டிபட்டி, தங்கமாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளன. 2 மாதத்திற்கு முன்பு நடவு செய்த வெங்காயம் ஒரு மாத மழை காரணமாக வேர் அழுகல் நோய் தாக்கு தலுக்குள்ளாகியுள்ளது. நான் 10 கிலோ விதை வெங்காயம் வாங்கி 20 சென்ட் நிலத்தில் பயிரிட்டேன். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்தேன். ஒரு லட்சம் ரூபாய் லாபம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ரூ.20 ஆயி ரம் கூட கிடைக்கவில்லை. வடமதுரை ஒன்றி யத்தில் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வெங்கா யம் பாதிப்பு உள்ளது. எனவே விவசாயத் துறை அதிகாரிகள் இந்த பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு கணக்கெடுத்து பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (ந.நி.)