districts

img

ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை: பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள்- அதிகாரிகள் வேலை நிறுத்தம்

மதுரை, ஜூலை 15-  ஊதிய உயர்வு வழங்காத ஒன்றிய நிதி அமைச்சகம், பொது இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாகத்தைக்  கண்டித்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஜூலை 15 வெள்ளியன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். கொரோனா பெரும் தொற்று காலத்தில் அரசு பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் அதிகாரிகளும் தங்க ளுடைய உயிரை பணயம் வைத்து பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவை யை செய்தனர். பெருந்தொற்றில் சுமார் 500 ஊழியர்கள் உயிரிழந்தனர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 5 ஆண்டுகள் ஆகியும் வழங்காத ஒன்றிய நிதி அமைச்சகம் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகமும் ஊழியர்கள் மீதான அலசியப் போக்கை காட்டி வருவதை கண்டித்து அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு மதுரை மண்டலம் சார்பில்   ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. மதுரை ரயில் நிலையம் எதிரில்  உள்ள பொது இன்சூரன்ஸ் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு  தலைவர் ராதாகிருஷ்ணன்  தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் புஷ்பராஜன், எஸ். ஆர். கண்ணன், மணி மாறன், உமா சங்கர் ஆகியோர் விளக்கிப் பேசினர்.