பொன்னேரி, ஜூலை 31- சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்க மாக செல்லும் மின்சார ரயில்களில் தினந்தோறும் நெல்லூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர் எண்ணூர் வழியாக வேலைக்கு மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் பயணிகள் பல ஆயிரம் பேர் வந்து செல்கி றார்கள். ரயிலில் பயணம் செய்து வரும் பயணிகள் ரயில் நிலையங்களில் அடிப்படை தேவைகள் குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க ப்படவில்லை. இந்த நிலையில் திரு வொற்றியூர்,அத்திப்பட்டு புது நகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், பொன்னேரி ஆகிய ரயில் நிலை யங்களில் பயணிகளுக்கு தேவை யான, கழிப்பறை சி.சி.டி.வி. கேமரா, இருக்கை, பார்க்கிங் வசதி, டீஸ்டால், கேன்டீன், மற்றும் கொரோனா தொற்று பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் களை மீண்டும் விடுவது, மீஞ்சூர் ரயில் நிலைய வளாகத்தில் பொது நவீன கழி ப்பறை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில் பயணி கள் சங்கத்தினர், சட்டமன்ற உறுப்பி னர் துரை சந்திரசேகர் தலைமையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.