அணைகளில் குறையும் நீர்மட்டம்
தேனி, ஏப்.19- மழையின்றி முல்லைப்பெரியாறு, வைகை அணை களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கோடை காலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. புதன்கிழமை காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கன அடி நீர் திறக்கப்படு கிறது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.35 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.'
கடமலைக்குண்டு குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை
கடமலைக்குண்டு, ஏப்.19- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தில் சங்கம் பட்டி தெருப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெருப்பகு திக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் சரிவர பரா மரிக்கப்படுவதில்லை. அதன் காரணமாக குழாயில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் விநியோகத்தின் போது தெருக்குழாய்கள் வழியாக மிக குறைந்த அளவிலேயே குடிநீர் மட்டுமே வருகிறது. இதனால் 1 குடம் குடிநீருக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் குழாய்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் விநியோகத்தின் போது பொதுமக்கள் சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் பிடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான பொதுமக்க ளுக்கும் போதுமான அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் வீடுகளில் குடிநீர் தேவை 2 மடங்காகி உள்ளது. ஆனால் குழாய்கள் சேதம் மற்றும் மின்மோட்டார் பயன்பாடு கார ணமாக போதிய அளவில் குடிநீர் கிடைக்காததால் பொது மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குழாய்களை சீர மைத்து அனைத்து பொதுமக்களுக்கும் போதுமான அள வில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிறுமிக்கு திருமணம்: 3 பேருக்கு 20 வருட சிறைத்தண்டனை
தேனி, ஏப்.19- தேனி மாவட்டம் எட்டப்பராஜபுரம் கொண்டல்நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(33). இவர் தனது உறவினரது 17வயது மகளை கேரளாவுக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். இத்திருமணத்திற்கு இவரது பெற்றோர் காளிமுத்து, பேபியம்மாள், உறவினர்கள் ஜெயா, சோமன் ஆகி யோர் உதவி செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கண்டமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து காவல்துறையினர் கடந்த 2016 மார்ச் 29 அன்று 5 பேரை யும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் நடந்தது. புதனன்று விசாரணை முடி வடைந்த நிலையில் சுரேஷ்குமார் மற்றும் இவரது பெற்றோர் காளிமுத்து, பேபியம்மாள் ஆகியோருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தலா 20 வருட கடுங்காவல் சிறை தண்டனையும், உறவினர்கள் ஜெயா, சோமன் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறைதண்டனையும் விதித்து நீதிபதி திலகம் உத்தரவிட்டார்.
தேனி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
தேனி, ஏப்.19- தேனி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ வில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மனைவி உயி ரிழந்தார். தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் (34), இவர் தனது ஆட்டோவில் மனைவி அம்பிகா(32), மனைவியின் சகோதரி விமலா, மாமியார் பவுன்தாய்(60) ஆகியோருடன் குச்சனூரில் இருந்து தேனி நோக்கி சென்றுள்ளார். அப்போது தேனி-உப்புக்கோட்டை சாலை, மாணிக்காபுரம் விலக்கு அருகே சாலை வேகத் தடை மீது ஏறி இறங்கியதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அம்பிகா, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார். பவுன்தாய் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல்துறை யினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தேனி மாவட்ட ஆட்சியர் தகவல்
தேனி, ஏப்.19- தேனி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி மாணவர்கள் வருகிற மே மாதம் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டப் பிரிவு 12(1) (சி)இன்படி 2023-2024-ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவின ரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க் கைக்கு 20.04.2023 முதல் 18.05.2023 வரை (www.rte. tnschools.gov.in) என்ற இணைதளம் வழியாக விண்ணப் பிக்கலாம்.
அரசு மருத்துவக் கல்லூரி உணவகத்தில் காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல்
தேனி, ஏப்.19- தேனி அரசு மருத்துவக் கல்லூரி உணவகத்தில் காலா வதியான உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு அலு வலர்கள் பறிமுதல் செய்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக உண வகங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரு கின்றன. இங்கு பால், பழம், பிஸ்கட் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த பெண்ணின் கணவர் ஒருவர் கேண்டீனில் கெட்டுப் போன புரோட்டா வழங்கியதாக வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இங்கு திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராகவன் தலைமையிலான அதிகாரிகள் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.வளாகத்தில் உள்ள மேலும் மூன்று கேண்டீன்களிலும் ஆய்வு செய்யப்பட்டு காலாவதியான டீ தூள், பிரட் பாக்கெட்டுகள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் மருத்துவமனையில் வெளியே அமைந் துள்ள கடைகளிலும் விரைவில் ஆய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 2 கைதிகளுக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
விருதுநகர், ஏப்.19- திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை வழக் கில் கைதாகி, விருதுநகர் சிறையில் இருந்த 2 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இத னால், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப் பிய மூவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி. இவரை கடந்த மாதம், முன்விரோதம் காரண மாக கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இந்த வழக்கில் 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், யுவராஜ், விக்கி உள்ளிட்ட 4 பேர் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த னர். இந்த நிலையில், யுவராஜ் மற்றும் விக்கி என்ற விக்னேஸ்வரன் ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, விரு துநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீசார் சிலம்பரசன், அழகுராஜா ஆகி யோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கொலையுண்ட சின்னத் தம்பியின் உறவினர்களான விஜி, நட்டு ராயன், ஒலிசை குமார், குணம், பரமசிவம் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்குள் புகுந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கைதிகளான யுவராஜ், விக்னேஸ்வரன் மீதும், போலீசார் மீதும் மிள காய் பொடியை தூவினர். பின்பு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் யுவராஜ், விக் னேஷ் ஆகியோரை வெட்டினர். இதைக் கண்ட போலீசார் துப்பாக்கி எடுத்து சுட்டு விடுவதாக மிரட்டியதால், விஜி உள்ளிட்ட ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி யோடிவிட்டனர். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழககுப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சீனிவாச பெருமாள் நேரில் வந்து ஆய்வு செய்தார். தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 3 பேர் கைது இந்தநிலையில், விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி விலக்குப் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரை-நாகர்கோவில் பேருந்தில் தப்பிச்செல்ல முயன்ற சின்ன தம்பியின் சகோதரர் செல்வம்(36) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்பு, அவரி டம் நடத்திய விசாரணையில் குற்றச் சம்ப வத்தில் ஈடுபட்ட சிலர் கன்னியாகுமரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை யினர், தனியார் லாட்ஜில் பதுங்கியிருந்த குமார் (40) மற்றும் சேகர் (39) ஆகிய ஆகி யோரை கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர்.
இளம்பெண் வயிற்றில் இருந்து 7 கிலோ கட்டி அகற்றம் விருதுநகர் அரசு மருத்துவர்கள் சாதனை
விருதுநகர், ஏப்.19- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இளம் பெண்ணின் வயற்றில் இருந்து 7 கிலோ எடையுள்ள கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான இளம் பெண் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திடீரென வயிற்றில் வீக்கம் இருந்தது. சிறிது நாட்க ளில் வயிற்றில் வலி ஏற்பட்டு கடும் அவ திப்பட்டு வந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள், நந்தினியை, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்பு, வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கரு முட்டையில் பெரிய கட்டி இருப்பது கண்ட றியப்பட்டது. எனவே, அறுவை சிகிச்சை யின் மூலமாக அந்தக் கட்டியை அகற்ற முடிவு செய்தனர். இதனையடுத்து, மகப்பேறு மருத்து வக் குழுவினர், மயக்க மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட னர். பின்பு, வயிற்றில் இருந்த 7 கிலோ அள விலான கட்டியை அகற்றினர். தற்போது, நந்தினி முழு குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து 7 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவக்குழுவினருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வர் சங்குமணி பாராட்டு தெரிவித்தார்.