districts

மதுரை முக்கிய செய்திகள்

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மறைவு: விளாத்திகுளத்தில் இரங்கல் கூட்டம்  

தூத்துக்குடி,அக். 26 கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த முற்போக்கு எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த பா.செயப் பிரகாசம் விளாத்திகுளம், அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் 23.10.2022 மாலையில் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன், சாரு நிலா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். சூரிய  தீபன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள் போன்ற பல்வேறு சமூக அக்கறையுடனான படைப்புக ளை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, இவர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் இணை இயக்குனராகவும் பணி யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது மறைவையொட்டி செவ்வாய்க்கிழமை எழுத்தாளர்கள் சார்பில், அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, மறைந்த பிரபல கரிசல் இலக்கிய எழுத்தாளர் பா.செயப் பிரகாசத்துடனான நட்பு பற்றியும், அனுபவங்கள் பற்றியும் கூறி தங்களது இரங்கலை தெரிவித்தனர். இரங்கல் கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். மேலும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தனது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள் ளார். அதன்படி, அவரது கடைசி ஆசையை நிறை வேற்றும் பொருட்டு எழுத்தாளரின் குடும்பத்தினரால் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி க்கு தானமாக வழங்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி,அக். 26 தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்த இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமணன் மகன் பூபதிராஜா (28). டிப்ளமோ இன்ஜினியரிங் முத்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் பகுதிநேர ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.2லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் பூபதிராஜா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் பூபதிராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய குளத்தூர் போலீசார் பிரேத சோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து குளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா

தூத்துக்குடி,அக். 26 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாயன்று யாகசாலை பூஜை யுடன் தொடங்கியது. செவ்வாய் இரவு 7 மணி அளவில் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் திரு வாடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் தங்கத் தேரில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.  திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி அங்க பிரதட்சணம் செய்தும் விரதத்தை தொடங்கினர். விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளது. 66 இடங்களில் குடிதண்ணீர் வசதி, 320 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் வசதி, 19 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பக்தர்களை கண்கா ணித்து வருகின்றனர். 6 இடங்களில் அகன்ற திரை மூலம் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினமும் 400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக். 29இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 தென்காசி, அக். 26  தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 29.10.2022 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பல்வேறு  தனியார்துறை முன்னணி  நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்க ளை தேர்வு செய்ய உள்ள னர்.  8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை நாடுநர் கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனி யார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail. com என்ற மின்னஞ்சல்  முகவரி வாயிலாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.  தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்க ளது வேலைவாய்ப்பு அலு வலக பதிவு மூப்பு எவ்வி தத்திலும் பாதிக்கப்படாது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

2 மகன்களுடன் பெண்  தற்கொலை முயற்சி

திருநெல்வேலி, அக். 26- நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாலன்(வயது 40). இவரது மனைவி பால ரேவதி(38). இவர்களுக்கு ஸ்ரீதரன்(13), ரசிகரன்(12) என்ற 2 மகன்கள் உள்ள னர். ரமேஷ் பாலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பால ரேவதி மூங்கிலடியில் உள்ள வீட்டில் தனது குழந்தைகளை கவனித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பாலரேவதியின் வீட்டில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்த அவரது உறவினர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் பாலரேவதி மற்றும் அவரது 2 மகன்களும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த களக்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்த னர். சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட விபத்தில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டதா? அல்லது தற்கொலைக்கு முயன்றார்க ளா? என்ற கோணத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ரேவதி வெளிநாட்டில் உள்ள தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அதன்பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த கோபத்தில் அவர் சமையல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு சிலிண்டரை திறந்து விட்டு கேஸ் அடுப்பை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி அன்று சாலை விதிமீறல்: 868 வழக்குகள் பதிவு 

திருநெல்வேலி,  அக். 26- தீபாவளி அன்று சாலை விதிகளை மீறியதாக 868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தீபாவளியன்று குற்ற சம்ப வங்களை தடுக்க மாவட்ட எஸ் பி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த னர். அப்போது சாலை விதிகளை மீறியதாக மாவட்டத்தில் 493 வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 75 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 47 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும், ஓட்டு னர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதும் அடங்கும். மேலும் 241 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதே போல் நெல்லை மாநகர பகுதிகளில் கமிஷனர் அவினாஷ்குமார், துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாலை விதிகளை மீறியதாக மொத்தம் 375 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது. இதில் மாநகர கிழக்கு பகுதி யில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 7 வழக்குக ளும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 44 வழக்குக ளும் உள்பட 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் மாநகர மேற்கு பகுதியில் அதிவேக மாக வாகனம் ஓட்டியதாக 19 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 2 வழக்குகள், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 107 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய தாக 27 வழக்குகள் உள்பட 243 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு உள்ளன. மாநகர பகுதிகளில் தீபாவளி யன்று சாலை விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.72 ஆயிரத்து 300 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது:  நெல்லையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம்  10 மடங்கு அபராதம் வசூலிப்பு

திருநெல்வேலி, அக் .26- நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல  உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப் படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில் புதிய வாகன மோட்டார் சட்டம் தமிழகம் முழுவதும் புதன்கிழமை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணமும் பதிவேற்றம் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இந்த புதிய சட்டம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சந்திப்பு மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து சப்- இன்ஸ் பெக்டர்கள் ஜான் கென்னடி, சப்பாணி தலைமையிலும், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் சப்- இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமை யிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் சென்றவர்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 10 மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.  அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்க ளிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களி டம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்க ளுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய வர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டது. புதன்கிழமை முதல் நாள் என்பதால் சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

திருவில்லிபுத்தூர், அக்.26-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் திருமலா புரம் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கோட்டை மலை. இவர் தனியார் பள்ளியில் படித்து  வந்தார். தீபாவளியன்று காலை தனது நண்பர்களுடன் முனியாண்டி கோவில் அருகில் உள்ள தனியா ருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கிணற் றில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூழ்கி இறந்தார்.  தகவல் அறிந்து வந்த திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் மாணவரின் உடலை மீட்டனர். கோட்டமலையின் தாயார் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

தேனி, அக்.26- வைகை அணைக்கு நீர் வரத்து குறைந்த தால் அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. வைகை அணை நீர்மட்டம் கடந்த அக் டோபர் 18 ஆம் தேதி 70 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, வைகை அணைக்கு வரும் உபரிநீர், வைகை ஆற்றில் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்ததால், கடந்த அக்டோபர் 22 அன்று முழுநீர்மட்டமான 71 அடியை எட்டியது. அணைக்கான தண்ணீர் வரத்துக்கு ஏற்ப, அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மூல வைகை நீர்ப்பிடிப்  பில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத தாலும், முல்லைப் பெரியாறு அணையிலி ருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் விநாடிக்கு 511கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாலும், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், அணையிலிருந்து வைகை ஆற் றில் உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 1,350 கன அடி, 58 கிராம கால்வாயில்  விநாடிக்கு 150 கன அடி, ஆண்டிபட்டி, சேட பட்டி, மதுரை குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநா டிக்கு 1,569 கன அடி வீதம் தண்ணீர் திறக்  கப்படுகிறது. அணை நீர்மட்டம் 70.83 அடி யாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 870 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 6,048 மில்லியன் கன அடி யாக உள்ளது.

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு      ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை

நாகர்கோவில், அக்.26- தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் சிறுபான்மையி னராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்தோருக்கு கல்வி உதவித்தொகை அறி விக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவி யர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உத வித்தொகையும் வழங்கப் படுகிறது. உதவித்தொகை பெறுவ தற்கு ஒன்றிய அரசின்  www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இக்கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு தகுதியான மாணவ/மாணவிகள் 31.10.2022 வரையிலும் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.  இத்திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியி டப்பட்ட வழிகாட்டி நெறி முறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இத்திட்டம் தொ டர்பான கூடுதல் விவரங்க ளுக்கு  மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தை தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள் ளார்.