“பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது, திருக்குறளின் சில வரிகளை வாசித்து, தமிழை மிகவும் போற்றுவதாகக் கூறி நடிக்கிறார். அதிகம் பேசப்படாத சமஸ்கிருதத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1,500 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கும் நிலையில், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ளவர்கள் கூட பேசும் தமிழை வளர்ப்பதற்கு வெறும் ரூ.28 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் பேசினார்.