திண்டுக்கல், ஜன.2- பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்காக அரசு உத்தரவை மீறி வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்களை வைத்து தண்டோரா மூலம் விளம்பரம் செய்துள்ளது. “அறிவியல் வளர்ந்து விட்டது. தொழில் நுட்பமும் பெருகிவிட்டது. எனவே தண் டோரா போடுவதைத் தொடர தேவை யில்லை. ஒலி பெருக்கியை வாகனங்களில பொருத்தி வலம் வருவதன் மூலம் மூலை முடுக்களிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்க்க முடியும். தண்டாரா போட தடை விதிக்கப்படுகிறது. மீறி ஈடுபடுத்துபவவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்று” தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வடமதுரையில் உள்ள பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்குப் பேரூராட்சி நிர்வாகம் துப்பு ரவுப் பணியாளர்களைப் பயன்படுத்தித் தண்டோரா போட வைத்ததற்குத் தலித் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.