districts

img

இடிந்து பாதை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்களின் அன்றாட போக்குவரத்து பாதிப்பு

வெள்ளத்தினால் கிருதுமால் நதியின் மேல் வயலசேரி கரிசலகுளம் இடையில் இருந்த பாலம் வெள்ளத்தால் இடிந்து பாதை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்களின் அன்றாட போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப் பகுதியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மக்கள் போக்குவரத்திற்காக உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.