விருதுநகர், ஆக.7- தற்கொலைக்கு முயன் றோரைக் காப்பாற்றிய பத்தி ரிகையாளர்களுக்கு நற்சான் றிதழ் வழங்கினார் விருது நகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திற்குள் திடீரெனத் தற் கொலைக்கு முயல்வோ ரைத் தடுத்து நிறுத்தி அவர் களது உயிரைக் காப்பாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக வியலாளர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக் கள் குறைதீர் கூட்டம் நடை பெறுவது வழக்கம். மனு அளிக்க வரும்போது, காவல்துறையினரின் சோத னைகளையும் தாண்டி, ஒரு சிலர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயல்கின் றனர். அப்போது அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடு பட்டிருக்கும் பத்திரிகை யாளர்கள் மற்றும் காட்சி ஊட கவியலாளர்கள் அவர்க ளைத் தடுத்து நிறுத்தி உயி ரைக் காப்பாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். பின்பு, அவர்களைக் காவல்துறை யினரிடம் ஒப்படைக்கின்ற னர். இந்நிலையில், தங்க ளது உயிரையும் பொருட் படுத்தாமல், தற்கொலை முயற்சியில் ஈடுபட முயல் வோரைத் தடுத்து உயிர்க ளைப் பாதுகாத்த தீக்கதிர் மாவட்ட செய்தியாளர் கே. ஜெயக்குமார், மூன் டி.வி செய்தியாளர் இரா.இராகுல் காந்தி, தினமலர் புகைப் படக் கலைஞர் பெத்துராஜ், ஜெ.டிவி ஊடகவியலாளர் ராஜசேகர் ஆகியோரை விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத் துப் பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடகவில யாளர்கள் கலந்து கொண்ட னர்.