மதுரை, அக்.10- மதுரை மாவட்டத்தின் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தோழர் எம்.பி.ஆர். என்ற எம்.பி.ராமச்சந்திரன் அக்டோபர் 10 செவ்வாயன்று காலமானார். தெற்குவாசல் தவிட்டுச் சந்தை யில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு தலைவர்கள் மற்றும் கட்சியினர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினருமான சு. வெங்க டேசன், மாநகர் மாவட்ட செயலா ளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், இரா. லெனின், வை. ஸ்டாலின், ம. பாலசுப்பிரமணியம், அ. கோவிந்த ராஜன், அழகர்சாமி, பகுதிக்குழு செயலாளர்கள் தெற்கு ஜெ. லெனின், மத்திய பகுதி - 2 ஜீவா, மேற்கு - 2 ஏ. எஸ். செந்தில் குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், மாநகராட்சி தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் எம். மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகி கள் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி கள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் யூ. எஸ்.அபுதாகிர் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட செயலாளர் எம். எஸ். முருகன், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி., மாநிலக்குழு உறுப் பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. லெனின் ஆகியோர் புக ழஞ்சலி செலுத்திப் பேசினர்.