தேனி, மே 5- பெரியகுளம் அருகே சாலை ஆக்கிர மிப்பை அகற்றித் தரக்கோரி பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத் திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் அருகே உள்ள கீழ வட கரை ஊராட்சிக்குட்பட்டது தெய்வேந்திர புரம் மற்றும் காமராஜர் நகர். இந்தப் பகுதி யில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு செல்லும் நான்கு சாலை களில் மூன்று சாலைகளை ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன்பே சிலர் ஆக்கிர மித்து வீடு கட்டியதால் அவர்களுக்கு தமி ழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கி உள் ளது. சாலை முற்றிலும் துண்டிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள ஒரு சாலையி லும் ஒரு தனிநபர் வீடு கட்டி ஆக்கிரமித்து இருந்து வருவதால் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மக்கள் போக்கு வரத்துக்கு வழங்கிட கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் என அனைத்து அரசுத்துறை அதிகாரிகளிட மும் தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை யிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை ஆக்கி ரமிப்பை அகற்றி தரக்கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காத்திருக்கும் போராட்டத்தில் போராட் டத்திற்கு வந்த மக்கள் அனைவருக்கும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவே சமையல் செய்வதற்கான அடுப்பை அமைத்து தேனீர் தயார் செய்து கொடுத்துப் போராட் டத்தில் ஈடுபட்டனர். மயங்கிய மூதாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி அன்னகாமு வெயிலின் காரணமாக மயக் கம் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் இளங்கோவன், பிரேம் குமார், தாலுகா குழு உறுப்பினர் மன்னர் மன்னன், பெரியகுளம் நகர மன்ற உறுப்பினர் மதன்குமார், சௌந்தரபாண்டி யன், மணிகண்டன், மணி, வினோத் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.