சிவகாசி,மே 29- சிவகாசி பராசக்தி காலனி யில் குடியிருப்புகள் அருகே மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனி யார் மதுபானக் கூடம் மற்றும் சூதாட்டக் கிளப் அமைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். குடியிருப்பு அருகே இந்த மது பானக் கூடம் அமைந்தால், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற் படும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, குடியிருப்பு அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக் கூடம் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நகர்க் குழு உறுப்பினர் இ.பழனி தலை மையேற்றார். கிளைச் செயலா ளர் ஜே.எல்.ஸ்டாலின் முன்னி லை வகித்தார். அதிமுக மாமன்ற உறுப்பினர் தங்க பாண்டியம்மாள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கரைமுரு கன், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் வெள்ளைச்சாமி, பாஜக சார்பில் வெள்ளைச் சாமி, சிபிஎம் நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் சிபிஎம் தலை வர்கள் ஜே.லாசர், பி.பால்ராஜா ஆகியோர் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.