சிவகங்கை,ஜன.29- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானா மதுரையில் ஏராளமான கிரா மங்களில் விவசாயம் பொய்த்துப்போய் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே.தண்டி யப்பன், மாவட்ட ஆட்சித் தலை வரிடம் மனு கொடுத்து வலி யுறுத்தினார். இளையான்குடி தாலுகா முத்துப்பட்டினம், வருந்தி, கரும்பு கூட்டம், கருஞ் சித்தி, பறத்தவயல், அய்யம் பட்டி சாத்தனூர்,முத்தூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவ சாயம் பொய்த்துப் போனதை கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துராம லிங்க பூபதி, இளையான்குடி தாலுகா செயலாளர் ராஜு, மாரிமுத்து ஆகியோர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தும் பொய்த் துப் போய்விட்டது .இதற்கு நிவா ரணம் தர வேண்டும் என்று விவ சாயிகள் மாவட்ட செயலாளர் தண்டியப்பனிடம் வலியுறுத்தி னர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மாங்குளம், சித்த லக்குண்டு, ஆலங்குளம் ,வேளாணரிஆகிய பகுதி களில் தண்டியப்பன் ,ஒன்றிய செயலாளர் ஆண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் முத்து ராமலிங்கம் ,ஒன்றிய தலை வர் பரமாத்மா ஆகியோர் விவசாயிகளை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்த னர். மாங்குளத்தில் விவசாயி கள் சங்கையா, பாலுச்சாமி, ஜெயக்கொடி ஆகியோர் மாவட்டச் செயலாளர் தண்டி யப்பனிடம் பாதிப்பு குறித்து கூறி னர். மழை பெய்யாமல் விவசா யம் பொய்த்துப்போய் வறட்சி யை எதிர்கொண்டுள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரைக்கும் செலவு செய்தி ருக்கிறோம். அதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஆடு மாடுகளுக்கு தேவையான தீவ னங்கள் கிடைப்பதற்கு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவையெல்லாம் மாவட்ட நிர்வாகம் உற்று நோக்கி கவனிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளித்தி ருப்பதாக தண்டியப்பன் தெரி வித்தார்.